ஈரானில் மீண்டும் புதிய உச்சம்: ஒரேநாளில் 655 பேர் கரோனாவுக்கு பலி
ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஈரானில் தொடர்ந்து 2-வது நாளாக கரோனா நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
620 பேர் நோய்த் தொற்றால் பலியானதாக ஞாயிற்றுக்கிழமை பதிவான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 655 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளதாக திங்கள்கிழமை பதிவாகியுள்ளது.
ஈரானில் 5 நாள்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்படவுள்ளதாக திங்கள்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆப்கனைவிட்டு வெளியேறத் துடிக்கும் மக்கள்: விமானத்தில் தொங்கிச் சென்ற 3 பேர் பலி(விடியோ)
நாட்டில் 40 சதவிகிதத்துக்கும் குறைவான மக்களே முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதாக ஈரான் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொத்த மக்கள்தொகையில் சுமார் 4 சதவிகிதம் பேர் மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.