உலகம்

அஷ்ரஃப் கனி முக்கியத்துவத்தை இழந்துவிட்டார்: அமெரிக்கா கருத்து

DIN

ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரஃப் கனி முக்கியத்துவத்தை இழந்துவிட்டார் என அமெரிக்க தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததை தொடர்ந்து, அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். 

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அஷ்ரஃப் கனியால் இனி முடிவுகளை எடுக்கு முடியாது என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மன்க் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் அவர் தஞ்சமுடைந்துள்ளாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு வெண்டி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கனி கூறியுள்ள நிலையில், அமெரிக்காவின் இக்கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

கடந்த 2014 முதல் 2021 ஆகஸ்ட் 15 வரை, அமெரிக்காவின் உதவியோடு ஆப்கானிஸ்தானில் கனி ஆட்சி நடைபெற்றுவந்தது. ஆப்கானிஸ்தானை விட்டு கனி வெளியேறியுள்ள நிலையில், முன்னாள் அதிபர் கர்சாயுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT