காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: 13 பேர் பலி
ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
தலிபான்கள் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்தபிறகு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் காபூல் விமான நிலையம் மட்டும் உள்ள நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி, “காபூலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த குண்டுவெடிப்பினால் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.