முகப்பு
உலகம்

காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு: 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

Updated On : 26 ஆகஸ்ட், 2021 at 9:42 PM
காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு
பகிர்:

ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிலையில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

தலிபான்கள் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்தபிறகு மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் காபூல் விமான நிலையம் மட்டும் உள்ள நிலையில் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி, “காபூலில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

இந்த குண்டுவெடிப்பினால் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.