துபை : உலகின் மிகப்பெரிய ராட்டினம் விரைவில் திறப்பு 
உலகம்

துபை : உலகின் மிகப்பெரிய ராட்டினம் விரைவில் திறப்பு

மேற்காசிய நாடுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக்  கண்டிருக்கும் நாடான துபையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

DIN

மேற்காசிய நாடுகளில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் நாடான துபையில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது.

அதில் புதிய முயற்சியாக  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் உலகின் மிகப்பெரிய  ராட்டினத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

தற்போது  அதன் அதிகாரப்பூர்வ திறப்பு விழா வரும் அக்டோபர் -21 ஆம் தேதி நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

லண்டன் ஐ   ராட்டினத்தை விட இரு மடங்கு பெரியதான இது  உலகிலேயே பெரிய ராட்டினம் ஆகும். 250 மீட்டர் நீளம் கொண்ட இந்த ராட்டினத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டங்கள் , சந்திப்புகள் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் இதை பயன்டுத்திக்கொள்ளலாம் என அந்நாட்டு சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ராட்டினத்தில் ஒரு சுற்றை நிறைவு செய்ய 38 நிமிடங்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

கொல்கத்தா: சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெஸ்ஸிக்கு ரூ. 89 கோடி! ஜிஎஸ்டி மட்டும் இவ்வளவா?

ஜம்மு-காஷ்மீரில் வீட்டில் இருந்து உணவு எடுத்துச் சென்ற பயங்கரவாதிகள்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்

SCROLL FOR NEXT