முகப்பு
உலகம்

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி

சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு தலைவலியாக இப்பிரச்சனைகள் உருவாகியிருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 35 பேர் பலி -கோப்புப் படம்
பகிர்:

சமீப காலங்களாக நைஜீரியாவில் தீவிரவாத தாக்குதல்களும் , ஆள் கடத்தல்களும் அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசிற்கு  இப்பிரச்சனைகள் தலைவலியாக உருவாகியிருக்கிறது. 

கடந்த ஆக-12 ஆம் தேதி இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த 22 பேர் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து தற்போது நேற்று (ஆக-25) அந்நாட்டின் பிளாட்டி மாகாணத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் 35 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதுகுறித்து அம்மாநில ஆளுநர் சைமன் லாலோங் ' எல்வா செங்கம் கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 35 பொதுமக்கள் இறந்திருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியவர்களில் 10 பேரை கைது செய்திருக்கிறோம் . மேலும் மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஒருநாள் ஊரடங்கும் அமல்படுத்த இருக்கிறோம்' எனத் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. 

முழு கட்டுரையைப் படிக்க →