காபூல் விமான நிலையம் 
உலகம்

காபூலில் மீண்டும் விமான சேவை தொடக்கம்

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

DIN

காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலால் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து கடந்த 10 நாள்களாக தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே வியாழக்கிழமை குண்டுவெடிப்பு நடந்தது. காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் விரைவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில், 108 பேருக்கு மேல் பலியாகினர்.

இதையடுத்து, பாதுகாப்புக் கருதி நேற்று இரவு முதல் காபூல் விமான நிலையத்தில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால், மீட்புப் பணிகள் முடங்கின.

தற்போது, காபூல் விமான நிலைய பாதுகாப்புக் கட்டுக்குள் வந்ததையடுத்து, மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக செயல் தலைவராக நிதின் நவீன் நியமனம்: தில்லி முதல்வா் வாழ்த்து

வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு: 4 சிறுவா்களிடம் விசாரணை

விக்கிரவாண்டி பெருமாள் கோயிலில் ஆண்டாள் உற்சவா் சிலை பிரதிஷ்டை

ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புகைப்படங்கள்

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங். ஆர்ப்பாட்டம்: சசி தரூர் பங்கேற்காததற்கு இதுதான் காரணமாம்..!

SCROLL FOR NEXT