உலகம்

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை!

DIN

மியான்மர் நாட்டின் மக்களாட்சி ஆதரவாளர், தேசிய ஜனநாயக லீக் கூட்டணியின் தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை வழங்கியது நீதிமன்றம்.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசடி எனக்கூறி கடந்த பிப்ரவரி மாதம் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. பின் ,ஆட்சியாளர்கள் ராணுவத்திற்கு எதிரான தலைவர்களை கைது செய்யத் தொடங்கினார்கள்.

முக்கியமாக ஆங் சான் சூகி உள்ளிட்ட சில தலைவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள்.

இந்த வழக்கு விசாரணை 8 மாதமாக நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்த நிலையில்   இன்று ராணுவத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பியதற்காகவும் , கரோனா விதிமுறைகளை மீறியதற்காகவும் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT