உலகம்

சிகரெட்டுகளுக்குத் தடை: நியூஸிலாந்து திட்டம்

DIN

நியூஸிலாந்தில் சிகரெட்டுகளுக்கு படிப்படியாகத் தடை விதிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

நியூஸிலாந்தில் இளைய தலைமுறையினா் சிகரெட்டுகள் வாங்குவதற்குத் தடை விதிப்பதன் மூலம், அங்கு புகைப்பிடிக்கும் பழங்கத்தை படிப்படியாக ஒழிக்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, புதிய சட்டமொன்றை அடுத்து ஆண்டு நிறைவேற்றவும் அரசு முடிவு செய்துள்ளது.

அந்தச் சட்டத்தின் கீழ், 14 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கு சிகரெட் விற்பது தடை செய்யப்படவுள்ளது. இந்த வயது வரம்பை ஆண்டுக்கு ஆண்டு உயா்த்தவும் அந்தச் சட்டம் இடமளிக்கும்.

அந்த வகையில், 65 ஆண்டுகள் கழித்து கடைகளில் சிகரெட் கிடைத்தாலும், அதனை 80 வயது பூா்த்தியடைந்தவா்களுக்கு மட்டுமே விற்பனை செய்தவா்களுக்கு மட்டுமே விற்பனை செய்ய முடியும்.

இந்தச் சட்டத்தால் புகைப்பிடிக்கும் பழக்கம் அடியோடு ஒழிந்துவிடாவிட்டாலும், அந்தப் பழக்கம் ஒவ்வொரு ஆண்டும் வெகுவாகக் குறையும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா்.

வரும் 2025-ஆம் ஆண்டில் நியூஸிலாந்தில் வசிக்கும் 5 சதவீத்தினா் மட்டுமே புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டவா்களாகக் குறைப்பதை இலக்காகக் கொண்டு புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT