உலகம்

ஜப்பானில் பறவைக் காய்ச்சல்: கொல்லப்படும் 3.5 லட்சம் கோழிகள்

DIN

பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3.5 லட்சம் கோழிகள் கொல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் பறவைக் காய்ச்சல் அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜப்பானின் சிபா மாகாணத்தில் 3,56,000 கோழிகள் கொல்லப்படவுள்ளதாக கியூடோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிபா மாகாணத்தில் 10-வது முறையாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. இங்கு இதுவரை பறவைக் காய்ச்சலால் 4.6 மில்லியன் பறவைகள் இறந்துள்ளன.

மேலும் ஜப்பானில், காகவா, ஃபுகுவோகா, ஹையோகோ, மியாஸாகி, ஹிரோஷிமா, நரா, வாகாயமா, டோகுஷிமா ஆகிய பகுதிகளிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளது.

ஜப்பானில் பறவைக் காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில், .9.3 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக ஜப்பான் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT