இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 12ஆக உயர்வு
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தின் நங்கன்ஜுக் மாவட்டத்தில் உள்ள நெக்டோஸ் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதி மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மாயமானவர்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.