உலகம்

கரோனா: உலகளவில் பலி எண்ணிக்கை 24.85 லட்சமாக உயர்வு 

DIN

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 24,85,386  லட்சமாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,22 கோடி பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 24,85,386 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 8,77,98,713 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,19,79,127 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 93,263 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,88,26,307 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5,12,590 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,10,16,434 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,56,498 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,01,97,531 ஆக உயர்ந்துள்ளது. உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,47,276 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

SCROLL FOR NEXT