ரஷியாவில் புதிதாக 27,039 பேருக்குத் தொற்று; மேலும் 536 பேர் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,039 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 536 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,039 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 536 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் புதிதாக 27,039 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 31,86,336 ஆக அதிகரித்துள்ளது.
Advertisement
தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 5,907 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் 536 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 57,555 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 25,80,138 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 5,48,643 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலகளவில் கரோனா பாதிப்பில் ரஷியா 4 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.