பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,242 பேர் பலி
பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,242 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,242 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 63,430 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,73,830ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் 1,242 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,98,974ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் 3ஆம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் இரண்டாம் அலை காரணமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.