மெக்சிகன் செய்தித் தொடர்பாளருக்கு கரோனா பாதிப்பு
மெக்சிகன் அதிபர் செய்தித் தொடர்பாளர் ஜீசஸ் ராமிரெஸ் கியூவாஸ் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
மெக்சிகன் அதிபர் செய்தித் தொடர்பாளர் ஜீசஸ் ராமிரெஸ் கியூவாஸ் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றி வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபர் அலுவலகத்தில் சமூக தொடர்புகளில் பொது ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய ராமிரெஸ் கியூவாஸ் விரைவில் குணமடைய விரும்புவதாக சமூக ஊடகங்களில் பலர் ஆதரவு செய்திகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து, இதுவரை மெக்சிகோவில் மொத்தம் 1,534,039 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,33,706 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.