வாஷிங்டன்: அமெரிக்காவில் தினசரி கரோனா பலி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அந்த நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,470 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இது, இதுவரை இல்லாத தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.
புதன்கிழமை நிலவரப்படி, அமெரிக்காவில் கரோனாவுக்கு பலியானவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,89,621-ஆகவும் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,33,69,732-ஆகவும் உள்ளது.
தினசரி பலி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.