இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுகிறது: ஈரான்
ரஷிய எண்ணெய்யை வாங்குமாறு உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுவதாக ஈரான் விமர்சனம்
ரஷிய எண்ணெய்யை வாங்குமாறு உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுவதாக ஈரான் விமர்சித்துள்ளது.
ஈரான் போருக்கு மத்தியில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்குமாறு இந்தியா உள்பட உலக நாடுகளிடம் அமெரிக்கா கெஞ்சுவதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி விமர்சித்துள்ளார்.
முன்னதாக, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்தார்.
இதனிடையே, ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக, ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்த நீரிணை வழியாகவே உலகின் அதிகப்படியான எண்ணெய் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதையடுத்து, உலக நாடுகள் மீண்டும் ரஷியாவிடமே எண்ணெய் வாங்குமாறு அமெரிக்கா கூறியுள்ளது.