உலகம்

இந்தோனேசியாவில் புதிய உச்சம்: ஒரேநாளில் 14,000 பேருக்கு கரோனா

DIN


இந்தோனேசியாவில் புதிய உச்சமாக சனிக்கிழமை 14,224 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,96,642 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் 283 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர், 8,662 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 25,767 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 7,27,358 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் ஜகார்த்தாவில் 3,536 பேரும், மேற்கு ஜாவாவில் 3,460 பேரும், மத்திய ஜாவாவில் 1,997 பேரும், கிழக்கு ஜாவாவில் 1,160 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT