முகப்பு
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 9.93 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
கோப்புப்படம்
பகிர்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

உலகின் 219 நாடுகளில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் அதிகரித்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகளும் தொடங்கி, வேகமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், நோய்த் தொற்று பரவல் வேகம் பல்வேறு நாடுகளில் கட்டுக்குள் வரமால் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. 

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,93,24,198 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அவா்களில் 21,30,341போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா். 7,13,69,788 பேர் பூரண குணமடைந்துள்ளனா். சுமாா் 2,58,23,680 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,665 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

அமெரிக்‍காவில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,55,66,789 கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 4 லட்சத்து 27 ஆயிரத்து 635 ஆக உயர்ந்துள்ளது.

2-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவில் 1 கோடியே 6 லட்சத்து 55 ஆயிரத்து 435க்கும் மேற்பட்டோர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 376 பேர் உயிரிழந்துள்ளனர். 

3-வது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 88 லட்சத்து 16 ஆயிரத்து 254 ஆக உயர்ந்துள்ளதோடு, 2 லட்சத்து 16 ஆயிரத்து 475- க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →