உலகம்

சீனாவில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து: 8 பேர் காயம்

PTI

வடகிழக்கு சீனாவின் துறைமுக நகரமான டாலியனில் திங்கள்கிழமை இயற்கை எரிவாயு குழாய் வெடித்ததில் எட்டு பேர் காயமடைந்தனர், 3 பேர் மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

டேலியன் ஜின்ஜோ மாவட்டத்தில் இன்று காலை 6 மணியளவில் இந்த எரிகுழாய் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதில் ஜன்னல் கண்ணாடி உடைந்து எட்டு பேர் காயமடைந்த நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தீ கட்டுப்படுத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் இயற்கை எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT