முகப்பு
உலகம்

இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஏமன்

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஏமனுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

Updated On : 8 ஜூலை, 2021 at 6:52 PM
இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் விமானங்களுக்கு தடை விதித்த ஏமன்
பகிர்:

கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து ஏமனுக்கு வரும் பயணிகள் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது.

நாடு முழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்களுக்கு தற்காலிக தடையை உலக நாடுகள் பலவும் விதித்து வருகின்றன.

முன்னதாக, ஏப்ரல் 24 முதல் சர்வதேச பயணிகள் விமானங்களை ஏமன் நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் தொற்று பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, பிரிட்டன், ஈரான், லெபனான், இராக், சிங்கப்பூர்  உள்ளிட்ட 24 நாடுகளுக்கு இடையேயான விமான சேவைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக ஏமன் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.