உலகம்

வங்கதேச தொழிற்சாலையில் தீ விபத்து: 52 பேர் பலி, பலர் படுகாயம்

DIN

வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 52 பேர் பலி, மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் தக்காவிற்கு அருகிலுள்ள ரூப்கஞ்சில் உள்ள உணவு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில், 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தீ விபத்திலிருந்து தப்பிக்க மேல் தளங்கள் இருந்து கீழே குதித்த பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சுமார் 24 மணிநேரமாக தீயை அணைக்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அச்சம் எழுந்துள்ளது. 

மேலும், விபத்து நடந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT