இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்
ஜகர்தா: நேற்று ( ஞாயிற்றுக் கிழமை ) நள்ளிரவு 12 மணி அளவில் இந்தோனேசியாவின் கோரண்டலோ என்கிற இடத்தில் நிலநடுக்கம் எற்பட்டதாக அந்நாட்டு புவியியல் மையம் தெரிவித்துள்ளது .
இந்த நிலநடுக்கத்தின் மையமானது 160.32 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆகப் பதிவாகியிருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் எந்தவிதமான சேதங்களும் ,உயிரிழப்புகளும் நிகழவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.