முகப்பு
உலகம்

இந்தோனேசியா: ஒரே நாளில் 1,415 போ் கரோனாவுக்கு பலி

இந்தோனேசியாவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,415 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

Updated On : 25 ஜூலை 2021, 3:57 am IST
பகிர்:

இந்தோனேசியாவில் கரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,415 போ் பலியாகினா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 1,415 கரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இத்துடன், நாட்டில் அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 82,013-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, புதிதாக 45,416 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,27,826-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

முந்தைய நாளான வெள்ளிக்கிழமை நாட்டில் 1,566 கரோனா பலி பதிவு செய்யப்பட்டது. இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பலி எண்ணிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.