ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் பல்வேறு வழிகளில் அரசு அவர்களை ஒடுக்க தாக்குதல்களை தொடர்ந்து வருகிறார்கள். மேலும் தலிபான்கள் ஒவ்வொரு பகுதியாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருப்பதால் அவற்றை முறியடிக்கும் முயற்சிகளிலும் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் தாலுகான் பகுதியைக் கைப்பற்ற தலிபான்கள் ரகசியத் தாக்குதலில் ஈடுபட இருக்கிறார்கள் என்கிற தகவலை அறிந்த ராணுவம் வான் வழித் தாக்குதலைக் தொடுத்தனர்.
இத்தாக்குதலில் தலிபான்கள் 28 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாகார் மாகாணத்தின் 16 மாவட்டங்களையும் தலிபான் கட்டுப்படுத்துவதாகவும், காபூலுக்கு வடக்கே 245 கி.மீ தொலைவில் உள்ள தாலுகான் நகரத்தைக் கைப்பற்ற கடந்த ஒரு மாதமாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.
நேற்று நடந்த தாக்குதலிலும் தலிபான்கள் 9 பேர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டனர்.
தலிபான் தரப்பிலிருந்து அளித்த தகவலில் , பதாக்சன் மாகாணத்தில் உள்ள 27 மாவட்டங்களில் 19 மாவட்டம் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.