உலகம்

நைஜீரியா : தீவிரவாத தாக்குதலில் 19 பேர் பலி 

DIN

நைஜீரியா நாட்டில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மாலி எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் " பாணிபாங்கு மாவட்டத்தைச் சேர்ந்த தேடேகோகு கிராமத்தில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 19 பேர் பலியானார்கள். இருவர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் மாயம் எனக் கூறியதோடு , சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு மற்றும் மருத்துவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ' எனத் தெரிவித்தார்.

பயங்கரவாதிகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களின் மீதும் ராணுவத்தினரின் மீதும் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த வருடத் தொடக்கத்திலிருந்து இதுவரை 300 பேர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரசாரத்துக்குப் பின் புத்துணர்ச்சி பெற.. ராகுல் வெளியிட்ட விடியோ

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

SCROLL FOR NEXT