முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதி விபத்து: பலி 50 ஆக உயர்வு

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு விரைவு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர்.

Updated On : 7 ஜூன், 2021 at 3:26 PM
பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் மோதி விபத்து: பலி 50 ஆக உயர்வு
பகிர்:

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு விரைவு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் ராணுவமும், துணை ராணுவப் படையும் அழைக்கப்பட்டுள்ளது.

தெற்கு பாகிஸ்தானின் கோட்கி பகுதியில் கராச்சியிலிருந்து புறப்பட்ட மில்லட் விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகி பக்கத்தில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தது. அப்போது,  அங்கே ராவல்பிண்டியிலிருந்து வந்து கொண்டிருந்த சர் சையத் விரைவு ரயில், தடம்புரண்டிருந்த ரயில் பெட்டிகள் மீது மோதியது. 

இந்த சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. 70 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப் பணிக்கு ராணுவமும், துணை ராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.