உலகம்

ஆப்கனில் 130 தலிபான்கள் சரண்

DIN

ஆப்கானிஸ்தானில் 130 தலிபான்கள் வியாழக்கிழமை சரணடைந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜிலானி ஃபர்ஹத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜிலானி ஃபர்ஹத் கூறியதாவது,

மேற்கு ஆப்கானிஸ்தான் மாகாணத்தின் ஹெராட் பகுதியில் சரணடைந்த 130 தலிபான்களும் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும், அவர்கள் வைத்திருந்த 85 ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள், 5 பி.கே. ரக துப்பாக்கிகள், ஐந்து சுற்றுகை கையெறி ஏவுகணை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஹெராட் பகுதியில் அமைதி திரும்பும் எனத் தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் சரணடைந்ததாக பாதுகாப்புத் துறை அளித்த அறிக்கைக்கு தலிபான் அமைப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT