ஆப்கனில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியானார்கள்.
ஆப்கன், வார்தாக் மாகாணத்தின் ஹெசா-இ-அவல் பெஹ்சுத் மாவட்டத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான எம்ஐ-17 ஹெலிகாப்டர் நேற்றிரவு தரையிரங்கியபோது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 4 பாதுகாப்படையினர் உள்பட 9 பேர் பலியானார்கள். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பம் ஆப்கனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே ஹெலிகாப்டர், ராக்கெட் மூலம் தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.