முகப்பு
உலகம்

தான்சானியா அதிபராக முதல்முறையாக பெண் பதவியேற்பு

தான்சானியா அதிபர் இதயநோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து துணை அதிபர் சமியா சுலுஹூ ஹாசன் வெள்ளிக்கிழமை புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

Updated On : 19 மார்ச் 2021, 6:17 pm IST
சமியா சுலுஹூ
பகிர்:

தான்சானியா அதிபர் இதயநோய் காரணமாக காலமானதைத் தொடர்ந்து துணை அதிபர் சமியா சுலுஹூ ஹாசன் வெள்ளிக்கிழமை புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

தான்சானியா அதிபராக செயல்பட்டு வந்தவர் ஜான் மகுஃபுலி கடந்த சில வருடங்களாக இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 2 வார காலமாக பொது நிகழ்ச்சியில் மகுஃபுலி கலந்து கொள்ளாத நிலையில் அவரது உடல்நலம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வந்தன. 

மகுஃபுலி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில் இதய நோய் காரணமாக புதன்கிழமை உயிரிழந்ததாக துணை அதிபர் சமியா சுலுஹூ அறிவித்தார். 

Advertisement

Advertisement

இந்நிலையில் தான்சானியா புதிய அதிபராக சமியா சுலுஹூ தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து சமியா வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். இவர் தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபர் என்னும் பெருமையையும் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments