ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் பலி
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கன், குவாஜா ஒமாரி மாவட்டத்தில் மூன்று பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை குறிவைத்து நேற்றிரவு பங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவங்களில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள்.
அப்போது நடைபெற்ற மோதலில் 4 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதேபோல் புல்-இ-ஆலமில் உள்ள காவல்நிலையம் அருகே பாதுகாப்புப்படையினரை குறிவைத்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் குண்டுஸ் நகரில் மினி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர்.