உலகம்

ஆப்கனில் பயங்கரவாதிகள் தாக்குதல்: 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் பலி

DIN

கிழக்கு ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்புப்படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். 

ஆப்கன், குவாஜா ஒமாரி மாவட்டத்தில் மூன்று பாதுகாப்பு சோதனைச் சாவடிகளை குறிவைத்து நேற்றிரவு பங்கரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவங்களில் 2 பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 6 பேர் பலியானார்கள். 

அப்போது நடைபெற்ற மோதலில் 4 தலிபான் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். இதேபோல் புல்-இ-ஆலமில் உள்ள காவல்நிலையம் அருகே பாதுகாப்புப்படையினரை குறிவைத்து ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் 5 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மற்றொரு சம்பவத்தில் குண்டுஸ் நகரில் மினி பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பொதுமக்கள் காயமடைந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT