உலகம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி

DIN

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியாவில் அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் பலவும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு மட்டும் தங்களது நாட்டிற்குள் அனுமதிக்கும் நடைமுறையை பல்வேறு நாடுகள் பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்ட அவர் கரோனா பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதுடன் தகுதிவாய்ந்த வெளிநாட்டுப் பயணிகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவிற்குள் கட்டுப்பாடுகளின்றி அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை 1,99,659 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT