6 நாடுகளுடனான விமானப் போக்குரத்துக்கு இலங்கை அரசு தடை
புதிய வகை கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 6 தென்னாப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு இலங்கை அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
புதிய வகை கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 6 தென்னாப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு இலங்கை அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் எனும் புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இலங்கை அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதனொரு பகுதியாக 6 தென்னாப்பிரிக்க நாடுகளுடனான விமானப் போக்குவரத்துக்கு தற்காலிகத் தடை விதித்து அந்நாட்டு அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
Advertisement
இதையும் படிக்க | சாதி, மத அரசியலை எதிர்க்கும் திரை நாயகர்கள்: அக்கறையா? வர்த்தகமா?
அதன்படி தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஜிம்பாவே, நமிபியா, லெசோதோ மற்றும் எஸ்வதினி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை உத்தரவு அமலாகிறது.
முன்னதாக நவம்பர் 24ஆம் தேதி புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் போட்ஸ்வானா, பெல்ஜியம், ஹாங்காங் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும் பரவி இருப்பது அந்நாடுகளின் சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.