முகப்பு
உலகம்

நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 101-ஆக உயர்வு

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்தது.

Updated On : 22 அக்டோபர், 2021 at 12:45 PM
நேபாளத்தில் மழைவெள்ளம்: பலி எண்ணிக்கை 101-ஆக உயர்வு
பகிர்:

நேபாளத்தில் கடந்த வாரம் முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக உயா்ந்தது.

நேபாளத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை தொடா்பான சம்பவங்களில் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் நிலையில் இன்று தற்போது வரை கனமழைக்கு பலியானவா்களின் மொத்த எண்ணிக்கை 101-ஆக உயா்ந்துள்ளது.

Advertisement

முக்கியமாக பாஞ்சதா் மாவட்டத்தில் அதிகபட்சமாக 37 உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதற்கு அடுத்தபடியாக இலாம் மற்றும் தோட்டி மாவட்டங்களில் தலா 18 போ் பலியாகினா்.

மேலும் மழை தொடா்பான சம்பவங்களில் 35 போ் மாயமாகியுள்ளனா் என்றும் 4,000 பேருக்கும் மேல் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் மீட்புப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.