ரஷியாவில் புதிய உச்சத்தில் தினசரி கரோனா பாதிப்பு
ரஷியாவில் தினசரி கரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தைத் தொட்டது.
ரஷியாவில் தினசரி கரோனா பாதிப்பு இன்று புதிய உச்சத்தைத் தொட்டது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,096 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும்.
அதில், அதிகபட்சமாக மாஸ்கோவில் 8,440 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 83,92,697ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கரோனா பலி எண்ணிக்கையிலும் இன்று மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டது.
இதையும் படிக்க- லண்டன் வரும் கோத்தபய ராஜபக்சவைக் கைது செய்ய வேண்டும்: வைகோ
கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவுக்கு மேலும் 1,159 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,85,587ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.