உலகம்

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதலில் சிக்கியவர் 96 வயதில் மரணம்

DIN

இரண்டாம் உலகப் போரின் போது அணுகுண்டு தாக்குதலுக்குள்ளான ஹிரோஷிமா நகரத்தைச் சேர்ந்த சுனோய் சுபாய் என்பவர் தனது 96ஆவது வயதில் மரணமடைந்தார்.

இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களின் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் 6, 1945ஆம் ஆண்டு ஹிரோஷிமா நகரத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இந்த அணுகுண்டு தாக்குதலில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பலியாகினர்.

உலகின் மோசமான தாக்குதலாக இன்றளவும் பார்க்கப்பட்டு வரும் இந்த சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அதன் சாட்சியங்களாக இருந்து வருகின்றனர்.

சுனோய் சுபாய் என்ற 96 வயது முதியவரும் அவர்களில் ஒருவர். கடந்த 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா இவரை சந்தித்து சென்றார்.

இந்நிலையில் முதுமையின் காரணமாக சுபாய் வியாழக்கிழமை மரணமடைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

புதுமைப் பெண் திட்டம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் 10,168 மாணவிகள் பயன்

ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை அதிகாரிகளுடன் இயக்குநா் ஆலோசனை

போ்ணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விரும்பிய பாடம் கிடைக்காத விரக்தியில் மாணவா் தற்கொலை

SCROLL FOR NEXT