உலகம்

வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ரூ.1949 கோடி அபராதம் விதித்த அயர்லாந்து

DIN

பயனர்களின் தனியுரிமை தரவுகளை தவறாகக் கையாண்டதாகக் கூறி வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு அயர்லாந்து அரசு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்துள்ளது.

வாட்ஸ்ஆப் செயலி உலகம் முழுவதும் பரவலாக பயனபடுத்தப்பட்டு வருகிறது. பயனர்களின் தரவுகளை விற்பனை செய்வதாக அவ்வப்போது அந்நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்து வந்தன. 

இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு அயர்லாந்து நாட்டின் தரவு பாதுகாப்பு விதிகளை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான விசாரணையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. 

இதனைத் தொடர்ந்து பயனர்களின் தரவுகளை ஐரோப்பிய நிறுவனங்களுக்கு பகிர்ந்த குற்றத்திற்காக வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.1949 கோடி அபராதம் விதித்து அயர்லாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் பயனர்களின் தரவு பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அரசின் அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT