நியூயார்க்கில் வரலாறு காணாத வெள்ளம் 
உலகம்

நியூயார்க்கில் வரலாறு காணாத வெள்ளம்: இன்று இரவுமுதல் அவசரநிலை அறிவிப்பு

நியூயார்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

DIN

நியூயார்க்கில் வரலாறு காணாத கனமழை பெய்து வரும் நிலையில், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்தவுள்ளதாக மேயர் பில் டி பிளாசியோ வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் நேற்று இரவு பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், மாகாணம் முழுவதும் இன்று இரவுமுதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க் மேயர் சுட்டுரையில் வெளியிட்ட செய்தியில்,

“நியூயார்க்கில் நேற்று இரவுமுதல் வரலாறு காணாத அளவில் வானிலை மோசமாக உள்ளது. மாகாணம் முழுவதும் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்து ஆபத்தான நிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று இரவுமுதல் அவசரநிலை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுவரை 5,300 வாடிக்கையாளர்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளனர்.

அடுத்த சில மணிநேரத்தில் மழை நிற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து மாகாணம் முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே, சுரங்கப்பாதைகள் மற்றும் சாலையோரங்களில் யாரும் நிற்க வேண்டாம். அனைவரும் வீடுகளிலேயே இருக்க வேண்டும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திண்டுக்கல்லில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

மூச்சுத்திணறல்: பிரசவித்த பெண் உயிரிழப்பு

ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்

நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் உயரும்: பியூஷ் கோயல் நம்பிக்கை

வாக்குச் சாவடிகளை பிரிப்பது குறித்து ஆலோசனை

SCROLL FOR NEXT