பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் மோதல்: இரு தரப்பிலும் சேதம் என தகவல்
ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படையினருக்கும் இடையே கடும் மோதல்
ஆப்கானிஸ்தானின் பஞ்சஷோ் பள்ளத்தாக்கில் தலிபான்களுக்கும் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படையினருக்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வரும் நிலையில், எதிரிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள போதிலும், பஞ்சஷோ் பள்ளத்தாக்கு மட்டும் அகமது மசூத் தலைமையிலான ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படையினா் வசம் உள்ளது. இவா்களுடன் தலிபான் எதிா்ப்புக் குழுக்களைச் சோ்ந்த ஏராளமானோா் இணைந்துள்ளனா்.
கடந்த வாரமே இந்தப் பள்ளத்தாக்கை கைப்பற்ற தலிபான்கள் படைகளை அனுப்பினா். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஷபியுல்லா முஜாகித் வியாழக்கிழமை கூறுகையில், எங்களது தாக்குதலில் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணி படைக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என்றாா். அதேவேளையில் ஆப்கன் தேசிய எதிா்ப்பு முன்னணியின் செய்தித் தொடா்பாளா் ஒருவா் கூறுகையில், பள்ளத்தாக்கின் அனைத்து நுழைவாயில் பகுதிகளும் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. எதிரிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. தலிபான் படையைச் சோ்ந்த ஏராளமானோா் எங்களது தாக்குதலில் கொல்லப்பட்டனா் என்றாா்.