முகப்பு
கோப்புப்படம்
உலகம்

சீனாவில் எரிவாயு கசிந்து விபத்து: 8 பேர் பலி

சீனாவின் தலியன் நகரத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உலகம்

சீனாவில் எரிவாயு கசிந்து விபத்து: 8 பேர் பலி

சீனாவின் தலியன் நகரத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
கோப்புப்படம்
பகிர்:

சீனாவின் தலியன் நகரத்தில் ஏற்பட்ட எரிவாயு கசிவு விபத்தில் 8 பேர் பலியாகினர். மேலும்  5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சீனாவின் புலந்தியன் மாவட்டத்தில் உள்ள தலியன் நகரத்தில் வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு பகுதியில் எரிவாயு கசிந்து திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும் இந்த தீ விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகினர். 5 பேர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்து நடந்து பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →