பிலிப்பின்ஸ் நாட்டின் மிண்டோரா மாகாணத்தில் இன்று(செப்-27) அதிகாலை 1.12 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகப் பதிவான இந்நிலநடுக்கம் அப்பகுதியிலிருந்து 24 கி.மீ தொலைவில் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.
சில இடங்களில் நில அதிர்வு அதிகரித்து பாதிப்புகள் உண்டானது.
இருப்பினும் சுனாமி எச்சரிக்கைக் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.