உலகம்

ஈக்வடார்: சிறைச்சாலை மோதலில் 24 பேர் பலி

DIN

மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் குயாக்வாலி நகரில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று(செப்-28)இரவு கைதிகளுக்குள் நடந்த மோதலில் 24 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

பல்வேறு கொடுமையான குற்ற வழக்குகளில் ஈடுபட்ட சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றவாளிகளுக்குள் மோதல் வெடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஈக்வடார் நாட்டின் முக்கிய சிறைகளில் ஒன்றான குயாக்வாலி சிறைச்சாலையில் ’லாஸ் வெகோஸ்’ மற்றும் ‘லாஸ் கேனரஸ்’ என்கிற இருதரப்பினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் சம்பவ இடத்திலேயே 24 பேர் பலியானதோடு 48 பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.

இத்தாக்குதலில் கத்திகள் , துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் அம்மாகாண காவல்துறை அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கிட்டதட்ட 5 மணி நேர போராட்டதிற்குப் பின்பே கலவரத்தை அடக்கியிருக்கிறார்கள்.

மோதல் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT