உலகம்

நார்வே, இராக், ஆஸ்திரேலியாவில் உள்ள தூதரகங்களை மூட இலங்கை அரசு முடிவு!

நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

DIN

நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்ததனால் இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விலைவாசி உயா்வு, எரிபொருள், உணவுப் பொருள்கள் பற்றாக்குறை என மக்கள் கடும் சிரமத்தில் உள்ளனர். 

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டும் இலங்கை அதிபா் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராகப் போராட்டம் நடைபெற்று வருவதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 

இதனிடையே ஆளும் கட்சி அமைச்சர்கள் பதவியை ராஜிநாமா செய்தத்தாலும், எம்.பி.க்கள் ஆளும் அரசுக்கு  அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதாலும் அங்கு அரசியல் குழப்பமும் நீடித்து வருகிறது. 

அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்ச இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சியினரின் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி கூட்டமும் நடைபெற்றது. 

இந்நிலையில், பொருளாதார நெருக்கடியால் நார்வே, இராக், ஆஸ்திரேலியா நாடுகளில் உள்ள தங்களின் தூதரகங்களை தற்காலிகமாக மூட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 

வருகிற 30 ஆம் தேதி முதல் மேற்குறிப்பிட்ட 3 நாடுகளில் உள்ள தூதரகங்கள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT