இலங்கையில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும் மக்கள். 
உலகம்

இலங்கையில் அவசர நிலை வாபஸ்: அதிபர் அறிவிப்பு

இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

DIN


இலங்கையில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை ரத்து செய்யப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு உணவு மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. நிலைமை நாளுக்குநாள் மோசமாக மாறுவதால் பொதுமக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

முக்கியமாக, அதிபர் கோத்தபய ராஜபட்ச வீட்டை முற்றுகையிட்ட மக்கள் அவர் பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து, அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் 2-வது நாளாக கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரகால பிரகடனத்தை வாபஸ் பெறுவதாக அதிபர் கோத்தபய ராஜபட்ச நேற்றிரவு அறிவித்துள்ளார்.

முன்னதாக, இச்சட்டம் மனித உரிமை மீறல் என இலங்கை மனித உரிமை ஆணையக்குழு அரசிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT