ஏப்ரல் 7ல் இலங்கையில் போராட்டம் நடத்திய அரசு மருத்துவர்கள். 
உலகம்

தீர்ந்துபோகும் நிலையில் மருந்துகள்: இலங்கை மருத்துவர்கள் எச்சரிக்கை

இலங்கையில் உயிர்காக்கும் மருந்துகள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டதாகவும் இதனால் நாட்டில் கரோனாவைவிட உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

DIN

இலங்கையில் உயிர்காக்கும் மருந்துகள் ஏறக்குறைய தீர்ந்துவிட்டதாகவும் இதனால் நாட்டில் கரோனாவைவிட உயிர்ப்பலி அதிகரிக்கும் என்று அந்நாட்டு மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

இலங்கையில்  அந்நியச் செலவாணி கையிருப்பு குறைந்துள்ளதால் அங்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை என மக்கள் மிகவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பொருளாதார நெருக்கடியின் விளைவாக, இலங்கையில் உயிர்காக்கும் முக்கிய மருந்துகள் தீர்ந்துபோகும் நிலையில் இருப்பதாகவும் மருந்துகள் இல்லையெனில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

கரோனா உயிரிழப்புகளைவிட பொருளாதார நெருக்கடி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் இனி இறக்குமதி செய்யப்பட்ட மருத்துவக் கருவிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைப் பெற முடியாது என்றும் இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT