முகப்பு
உலகம்

ஷாங்காயில் கரோனா மீண்டும் புதிய உச்சம்

சீனாவின் ஷாங்காய் நகரில் அறிகுறிகளுடன் கூடிய தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

சீனாவின் ஷாங்காய் நகரில் அறிகுறிகளுடன் கூடிய தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதையடுத்து, நாட்டின் மற்ற பகுதிகளிலும் நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக பொதுமுடக்க விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,590 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. அந்த நோயின் அறிகுறிகள் அல்லாத 19,923 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய நாளில் 19,872-ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ள ஷெங்ஷூ விமான நிலைய பொருளாதார மண்டலத்தில் 14 நாள்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.