இலங்கையில் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, அதிபா் அலுவலகம் அருகே பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபட்சவை தவிர அமைச்சரவையில் உள்ள அனைவரும் ராஜிநாமா செய்தனர். முதல்கட்டமாக 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இன்று புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.