ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்: திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி 
உலகம்

ஏலத்தில் வாங்கிய சூட்கேஸ்: திறந்து பார்த்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி

பெரிய சூட்கேஸ்களை வாங்கி வந்த குடும்பத்தினர், அதனை வீட்டுக்குக் கொண்டு வந்து திறந்து பார்த்தபோது, அதில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

PTI

நியூஸிலாந்தில், பழைய பொருள்களை ஏலம்விடும் கடையிலிருந்து இரண்டு பெரிய சூட்கேஸ்களை வாங்கி வந்த குடும்பத்தினர், அதனை வீட்டுக்குக் கொண்டு வந்து திறந்து பார்த்தபோது, அதில் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த சூட்கேஸில் இருந்த பிள்ளைகளின் வயது 5 மற்றும் 10 ஆக இருக்கலாம் என்றும், கடந்த நான்கு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் இந்த சூட்கேஸில் அடைக்கப்பட்டிருக்கலாம் எனறும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முதல்நிலையிலேயே இருப்பதாகவும், ஆனால் மிகவும் கொடூரச் சம்பவமாக இருப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குழந்தைகள் யார், இந்த சம்பவம் எங்கு நடந்தது, எப்படி நடந்தது, கொலையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் நடந்த ஏலத்தில், இந்தக் குடும்பத்தினர் இரண்டு சூட்கேஸ்களை வாங்கியதாகவும், அவை கடந்த வாரம் வீட்டுக்கு வந்த போது, திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT