உலகம்

விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கம்! - எலான் மஸ்க் ட்வீட்

ட்விட்டரில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 150 கோடி கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என்று அதன் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

DIN

ட்விட்டரில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள 150 கோடி கணக்குகள் விரைவில் நீக்கப்படும் என்று அதன் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா  நிறுவனர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில் ட்விட்டரில் பல ஆண்டுகளாக 'ட்வீட்' அல்லது லாக் இன் செய்யாத கணக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கப்படும் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

முன்னதாக, ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் உள்ள போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, ட்விட்டர் நிறுவனத் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்ற பிறகு, 50% ஊழியர்களான சுமார் 7,500 பேர் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். மேலும் பலர் தானாகவே வெளியேறினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT