முகப்பு
உலகம்

ப்ளூ டிக் சேவை: தொலைபேசி வாயிலாக சரிபார்ப்பு முறை சேர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர், ப்ளூ டிக் சேவையில், தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதைத் தடுக்கும் வகையில், தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Updated On : 12 டிசம்பர், 2022 at 4:40 PM
ப்ளூ டிக் சேவை: தொலைபேசி வாயிலாக சரிபார்ப்பு முறை சேர்ப்பு
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:35 PM


சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டர், ப்ளூ டிக் சேவையில், தவறான நபர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதைத் தடுக்கும் வகையில், தொலைபேசி வாயிலாக சரிபார்க்கும் முறையை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ப்ளூ டிக் வழங்கப்பட்டிருப்பவர்களுக்கு, அவர்கள் இணைத்திருக்கும் செல்லிடப்பேசி எண் மூலம் அழைப்பு மேற்கொள்ளப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு, ப்ளூ டிக் மீண்டும் உறுதி செய்யப்படும் என்று டிவிட்டர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, டிவிட்டர் நிறுவன மேலாளர் எஸ்தர் கிராஃபோர்டு, டிவிட்டர் வலைத்தளத்தில் ப்ளூ டிக் வழங்குவதற்கான நடைமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

Advertisement

இதையடுத்து, பல பயனாளர்கள் அது தொடர்பான சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். அதற்கு எஸ்தர் பதில்களை வெளியிட்டிருந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.