உலகம்

வட கொரியாவில் தொடரும் ஏவுகணை சோதனை!

வட கொரியா அதன் கிழக்குப் பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (டிசம்பர் 18) சோதனை செய்தது.

DIN

வட கொரியா அதன் கிழக்குப் பகுதியை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இன்று (டிசம்பர் 18) சோதனை செய்தது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் வரை செல்லக் கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக இரண்டு நாள்களுக்கு முன்பு கூறிய நிலையில், இன்று (டிசம்பர் 18) இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வட கொரியா மேற்கொள்ளும் முதல் ஏவுகணை சோதனை இதுவாகும்.

தென் கொரியாவின் வடமேற்கு திசையில் இருந்து இந்த வட கொரியாவின்  ஏவுகணை பறந்து சென்றதாக கூறப்படுகிறது. தென் கொரியாவின் குறுக்காக இந்த ஏவுகணைகள் பறந்து சென்று அந்த நாட்டின் கிழக்குப் பகுதி நீரில் விழுந்ததாக தென் கொரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல, ஜப்பான் நாட்டினைச் சேர்ந்த அதிகாரிகளும் வட கொரியாவில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதை பார்த்ததாகக் கூறுகிறார்கள். இந்த இரண்டு ஏவுகணைகளும் 50 நிமிட இடைவெளியில் ஒன்றன் பின் ஒன்றாக ஏவப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து ஜப்பான் கடலோரக் காவல் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது: வடகொரியாவில் இருந்து இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இந்த ஏவுகணைகள் கொரிய தீபகற்பத்துக்கும், ஜப்பானுக்கும் இடையில் உள்ள நீரில் விழுந்துள்ளது என்றார்.

அண்மையில், ஜப்பான் தனது பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான நிதியை ஜிடிபியில் 1 சதவிகித்தில் இருந்து 2 சதவிகிதமாக வருகிற 2027 முதல் உயர்த்த முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீலகிரி உள்பட 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

1970ல் தயாரிக்கப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்துக்கு ஐஃபோன்! விடியோ உண்மைதானா?

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடக்கம்!

சமூக வலைதளங்களில் கவனம் பெறும் ஹாட்ஸ்பாட் - 2 காட்சிகள்!

பாட்னா உணவகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் சடலமாக மீட்பு!

SCROLL FOR NEXT